சீமை கருவேலை மரங்களை அகற்ற இறுதிக் கொள்கை – தமிழக அரசுக்கு கால அவகாசம் விதித்து கோர்ட் உத்தரவு…!

சீமை கருவேலை மரங்களை அகற்ற இறுதிக் கொள்கை வகுக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் விதித்து கோர்ட் உத்தரவு.
சீமைக்கருவேலை மரம் அகற்றம்
தமிழகத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு வழக்கை விசாரித்த நீதிமன்றம் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு தரப்பில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வரைவுக் கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாத காலம் அவகாசம்
மேலும், இறுதி கொள்கை முடிவை அறிவிக்க இரண்டு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மாத காலம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025