தூத்துக்குடி எட்டயபுரத்தில் பாரதியார் புகைப்பட கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த ஊரில், அவரின் புகைப்பட கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று திறந்து வைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் வாழிய பாரத மணித்திருநாடு என்ற மின்னூலையும் வெளியிட்டார் நிதியமைச்சர். மத்திய இணை அமைச்சர் எல் முருகனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதன்பின் பாரதியார் நூற்றாண்டு விழாவில் பேசிய நிதியமைச்சர், பெண் விடுதலைக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் பாரதியார். தூத்துக்குடி பள்ளிகளில் பாரதியார் பாடல், கவிதைகளை சொல்லி கொடுங்கள், போட்டி வைத்து பரிசளியுங்கள் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, மகாகவி பாரதியார் மணி மண்டபத்தில் உள்ள பாரதியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாரதியார் வாழ்ந்த இல்லத்துக்குச் சென்ற அவர் அங்குள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…