தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தீப்பெட்டி தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 50 முழுநேர தொழிற்சாலையும், 300 பகுதிநேர தீப்பெட்டி தொழிற்சாலையும், அதுபோக 2000 சிறுதொழில் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது.
கனமழை காரணமாக கேரளாவில் இருந்து வரும் தீப்பெட்டி செய்ய தேவையான மரத்தடிகள் வரத்து குறைந்து உள்ளன. மேலும், அவற்றை கடுமையான மழை காரணமாக அதனை காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வடமாநிலத்தில் இருந்து பெறப்பட்ட ஆர்டர்களுக்கும், உள்ளூர் ஆர்டர்களுக்கும் தீப்பெட்டி தயாரித்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தீப்பெட்டி மரத்தடியின் விலை, மூலப்பொருட்களின் விலை ஏற்றம், ளார் வாடகை, மின்கட்டணம் உயர்வு போன்றவை இந்த தொழிலை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழிற் சாலையும், தீப்பெட்டி பிரிண்ட் செய்யும் தொழிலும் தற்போது முடங்கியுள்ளது. இதன் காரணமாக சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…