சேலத்தில் மீண்டும் இன்று முதல் விமான சேவை.!

சேலத்தில் இன்று முதல் மீண்டும் விமான சேவை மீண்டும் தொடங்குகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது உள்நாட்டு விமான சேவையை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, சேலம், சென்னை இடையே இன்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. 2 மாதத்திற்கு பிறகு விமான சேவை தொடங்க உள்ள நிலையில் தற்போது விமானம் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்திற்கு 08.25 க்கு வந்தடையும்பின்னர் அந்த விமானம் சேலத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 09.50மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானம் வரும். பின் 12.15 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னைக்கு அந்த விமானம் புறப்பட்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.