நேற்று ஊரக உள்ளாட்சிகளுக்கான முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது.இதனால் முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது குடும்பத்தாருடன் வாக்கு பதிவு செய்தார்.
ஜனவரி 16-ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.இதனால் அன்று 9-12 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,பிரதமர் மோடியின் உரையைக் கேட்க 16-01-2020 அன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடுவதா? உடனே திரும்பப்பெறாவிட்டால் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடியின் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம். பொங்கல் விடுமுறை ரத்து இல்லை .அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வீட்டில் தொலைக்காட்சி இல்லாதவர்கள், ஜனவரி 16ல் பிரதமர் மோடியின் உரையை பள்ளியில் சென்று பார்க்கலாம். இது கட்டாயமில்லை .
பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.நிர்வாக திறனில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உள்நோக்கத்துடன் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.2010-ம் ஆண்டு காங்கிரஸ் – திமுக கூட்டணியில் இருந்தபோது என்பிஆர் கொண்டுவரப்பட்டது, அரசுக்கு நெருக்கடி தரவே திமுக அதை எதிர்த்து போராடுகிறது.தேசிய குடியுரிமை பதிவேடு அமல்படுத்தப்படாது என மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது.10 ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடுதான் அமல்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…