“மீனவர்கள் பிரச்சனை” – மத்திய அமைச்சர் எல்.முருகன் அளித்த உறுதி!

Published by
Edison

இலங்கை கடற்படையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விரைவில் வந்து விடுவார்கள்,அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மத்திய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 68 தமிழக மீனவர்கள் மற்றும் 75 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இதனையடுத்து,கைது செய்யப்பட்ட  மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.

அதே சமயம்,கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம்,மண்டபம்,புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில்,இலங்கை கடற்படையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விரைவில் வந்து விடுவார்கள்,அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மத்திய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக,அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

“மீனவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை பிரதமர் மோடி அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்.இது தொடர்ந்து நடக்கக்கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமாக உள்ளது.இதற்காக கூட்டுக் குழு(joint committee) ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது.எனினும்,3 மாதத்திற்கு ஒரு முறை நடக்கவேண்டிய கூட்டுக் குழு கூட்டம்,கொரோனா காரணமாக தள்ளிப் போனது.விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படவுள்ளது.

மேலும்,கூட்டுக் குழு பேச்சுவார்த்தையின் மூலம் மீனவர்கள் கைது செய்யப்படுவதை முற்றிலுமாக தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் அவர்கள் எல்லை தாண்டி செல்வதுதான் பிரச்சனையாக கூறப்படுகிறது. சர்வதேச எல்லை என்பது 200 நாட்டிக்கல் மைல் உள்ளது,ஆனால்,குறிப்பிட்ட பகுதிகளில் 20 நாட்டிக்கல் மைல் தொலைவிலேயே வருவதால் மீனவர்கள் கைது பிரச்சனை தொடர்ந்து நடைபெறுகிறது.

இனி வருகின்ற காலத்தில்,கூட்டுக்குழு கமிட்டி மூலமாக இதை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சட்டம் உண்டு.அதன்படி,அந்த நாட்டிற்கான சட்டத்தை கடைபிடித்து மீனவர்களை விரைவில் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.விரைவில் அவர்கள் வந்து விடுவார்கள் என்ற உறுதியையும் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

28 minutes ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

1 hour ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

1 hour ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

2 hours ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

3 hours ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

16 hours ago