தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது – அமைச்சர் காமராஜ்.
தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது என்று அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சேர்ப்பதை உணவுத்துறை முறையாக செயல்படுத்தியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கு கூடுதலாக அரிசி வழங்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் விலையின்றி வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், மக்களுக்கு கூடுதல் அரிசி வழங்க ரூ.438 கோடி நிதி ஒதுக்கி மத்திய தொகுப்பில் இருந்து அரிசி வாங்கப்பட்டது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு வீடு தேடிச்சென்று உண்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அம்மா உணவகங்களில் விலையின்றி ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளார். அசாதாரண சூழலில் முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கை பேசப்படக்கூடிய வகையில் உள்ளது. குழுக்கள் அமைத்து துறைரீதியான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…