சென்னையில் 46-ஆவது சுற்றுலா மற்றும் வா்த்தகக் கண்காட்சியை தீவுத் திடல் மைதானத்தில் அண்மையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா்.இதில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து துறை சார்ந்த புரிதல்கள் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுருக்கிறது.
அதில், சுகாதாரத்துறை சார்பாக ஏற்படுத்தப்பட்டு உள்ள பிரத்யேக அரங்கில், மருத்துவக் கல்வி, தொழு நோய், காச நோய், புகையிலை தடுப்பு, பாரம்பரிய மருத்துவம் குறித்த விரிவான விளக்கங்கள் எளிமையாக புரியும் வகையில் உள்ளன. குறிப்பாக, அம்மா முழு உடல் பரிசோதனை மையமும் செயல்பட்டு வருகின்றது. இந்தப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவில் இருந்து மருத்துவ சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதில் வெறும் 50 ரூபாய்க்கு 12 வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உடல் வெப்ப நிலை, இரத்த அழுத்தம், இதய துடிப்பு, உடல் பருமன், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, எடை, உயரம், உடல் பருமன் குறியீடு, ரத்த அணுக்கள் எண்ணிக்கை, சர்க்கரை அளவு, பார்வை திறன் உள்ளிட்ட பரிசோதனைகள் சில நிமிடங்களில் மேற்கொள்ள படுகின்றது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: முழு உடல் பரிசோதனை அரங்கில் ரத்த அணுக்களின் அளவு, ரத்த சா்க்கரை அளவு ஆகியவை ரத்த மாதிரிகளைக் கொண்டு பரிசோதிக்கப்படுகின்றன. மேலும், உடனடியாக முடிவுகள் தெரிவிக்கப்பட்டு, அதற்கு உரிய மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. சுற்றுலா கண்காட்சிக்கு செல்வோர் மறக்காமல் சுகாதாரத்துறை அரங்கிற்கு சென்று குறைந்த செலவில் இந்த பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…