லஞ்சம் கொடுக்காத விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வன அதிகாரி சஸ்பென்ட்

Published by
Rebekal

லஞ்சம் கொடுக்காத விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வனத்துறை அதிகாரி அன்பழகன் வன அலுவலர் முருகனால் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ராமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் காட்டு விலங்குகள் விளை நிலங்களுக்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பள்ளம் தோண்ட வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்காக வனத்துறை பணியாளர் விவசாயிகளிடம் 5 லட்சம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் விவசாயிகள் தங்களால் முடிந்த மூன்று லட்சத்தை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் மீதி பணத்தை தருமாறு கேட்டு துப்பாக்கியை காட்டி விவசாயிகளை மிரட்டியதாக வனத்துறை அதிகாரி மீது விவசாயிகள் தமிழக முதல்வர் மற்றும்  சேலம் மாவட்ட வன அலுவலர் ஆகியோரிடம் கடந்த 26ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் வனத்துறை அதிகாரி அன்பழகனை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

சற்று நேரத்தில் விண்வெளி பயணம்.., டிராகன் விண்கலனின் தொலைதொடர்பு சோதனை நிறைவு – ஸ்பேஸ் எக்ஸ்!

சற்று நேரத்தில் விண்வெளி பயணம்.., டிராகன் விண்கலனின் தொலைதொடர்பு சோதனை நிறைவு – ஸ்பேஸ் எக்ஸ்!

அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…

41 minutes ago

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

2 hours ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

3 hours ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

3 hours ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

3 hours ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

4 hours ago