[Image source : Twitter/@SellurKRajuoffl]
திராவிட மாடல் என்று ஒன்று இல்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை சித்திரை திருவிழா நடவடிக்கைகளை பற்றி பல்வேறு விமர்சனங்களைமுன் வைத்தார்.
அவர் கூறுகையில், திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. ஏழைகளுக்கு பாதுகாப்பில்லாத தன்மையே திராவிட மாடல் என கூறுகிறார்கள் என்று விமர்சித்தார். மேலும், மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதனை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். ஆனால் அரசு அதனை கட்டுப்படுத்த கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் , மதுரை சித்திரை திருவிழாவில் நடந்த 5 உயிரிழப்புக்கு திமுக அரசு தான் காரணம் என தெரிவித்தார். இந்த அரசு அறியாமையில் இருக்கிறது என்றும், இதுவரை சித்திரை திருவிழாவில் உயிரிழப்புகள் நேர்ந்தது இல்லை என்றும் தற்போது தான் இது போன்று உயிரிழப்புகள் நடக்கிறது என்றும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
அடுத்ததாக ஆளுநர் பற்றி பேசுகையில், ஆளுநர் கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால், திமுகவினர் ஆளுனரை விமர்சிக்கும் போது ஆளுநர் எப்படி சும்மா இருப்பார்.? கேள்வி எழுப்பினர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…