முன்னாள் முதல்வர் “கருணாநிதியின் நிழல்” சண்முகநாதனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

Published by
Edison

சென்னை:முன்னாள் முதல்வர் “கருணாநிதியின் நிழலாக இருந்த அவரது உதவியாளரான சண்முகநாதன் அவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளரான கோ.சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,நேற்று காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

மறைந்த சண்முகநாதன் அவர்கள் மீது கொண்ட அதீத பாசத்தால்,நேற்று மாலை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில்,மீண்டும் இரண்டாவது முறையாக நேற்றிரவு அவரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில்,முன்னாள் முதல்வர் “கருணாநிதியின் நிழல்” என்று அழைக்கப்பட்ட சண்முகநாதன் அவர்களின் இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி,டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக சென்று மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தின் பின்புறம் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

குறிப்பாக,அனைத்து அரசு சார்ந்த நிகழ்சிகளையும் ரத்து செய்து விட்டு மறைந்த சண்முகநாதன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.

சண்முகநாதன் – யார் இவர்:

தமிழ்நாடு போலீசில் சுருக்கெழுத்து நிருபராக சண்முகநாதன் அவர்கள் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.அதன்படி,எதிர்க்கட்சித் தலைவர்கள் மேடையில் பேசுவதை குறிப்பெடுத்து அரசுக்கு அனுப்பவேண்டிய வேலையை செய்து வந்தார்.

இந்த நிலையில்,1967 ஆம் ஆண்டு முதல் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவு வரை அவரின் நேர்முக உதவியாளராக சுமார் அரைநூற்றாண்டு காலம் பணியாற்றினார்.அந்த வகையில்,சட்டமன்றம், தலைமைச் செயலகம், சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் கருணாநிதியுடன் அவரின் நிழலாகவே பின்தொடர்ந்தவர்தான் சண்முகநாதன்.இந்நிலையில்,அவரின் மறைவு திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

39 minutes ago

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

54 minutes ago

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

18 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

19 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

20 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

20 hours ago