“முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது”-நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ..

Published by
Edison

அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 9 ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து,வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டில்தான் சொத்துக்கள் அதிமகாக உள்ளது,அதனால்தான் தமிழகத்திற்கு கடன் நெருக்கடி அதிகமாகவுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்ததாக கூறி,அதற்கு பதில் அளித்த மாஃபா பாண்டியராஜன் அவர்கள்,”கடன் வாங்கி சொத்துக்கள் சேர்த்தோம்,ஆனால்,குறைந்த வட்டியிலேயே அதிமுக ஆட்சியில் கடன் வாங்கப்பட்டது.சொத்துக்கள் அதிகமாக உள்ளதால்தான்,கடன் அதிகமாக தருகிறார்கள்.எனவே,கடன் வாங்குவது தவறில்லை,ஆனால்,என்ன வட்டி விகிதத்தில் வாங்குகினோம் என்பதை வெள்ளை அறிக்கையில் கொடுக்கவில்லை”,என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ,இதற்கு பதில் அளிக்கும் வகையில் மதுரையில் செய்தியாளர்களிடம்  பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சிப்பதாக கூறினார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:”மாஃபா பாண்டியராஜன் அவர்களுக்கு பொருளாதாரம் தெரியாது,அவரது உளறலுக்கு எல்லாம் நான் பதில் கூற முடியாது.தவறான சூழ்நிலையை திருத்துவதற்கு நான்கு படிகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

  1. முதலில் அனைத்து தகவல்களையும் திரட்டி,நீங்களே நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
  2. மக்களிடம் சென்று அதை எடுத்துக்கூறுங்கள்,அப்போதுதான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற அர்த்தம் புரியும்.
  3. மக்களிடம் கேட்ட கருத்துக்களை கொண்டு,அதை எப்படி திருத்தலாம் என்று நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.
  4. அதன்பின்னர்,திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று முதல்வர் கூறியதாகவும்,அதுதான் ஜனநாயகத்தின் மரபு,வெளிப்படைத்தன்மை என்று தெரிவித்தார்.

மேலும்,முன்னதாக அதிமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதா?,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட தொலைநோக்கு பார்வை திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதா? என்ற கேள்வியையும் எழுப்பினார்.

Recent Posts

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

17 minutes ago

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

2 hours ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

2 hours ago

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

3 hours ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

4 hours ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

4 hours ago