மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக வரும் செய்தி தவறானது என முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் தெரிவித்தார்.
திருப்பூரில் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் இன்று அதிமுக எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என தகவல் வெளியானது.
இதுகுறித்து சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் கூறுகையில், மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக வரும் செய்தி தவறானது. அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளதால் இரு கட்சிகளிலும் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன். ஒரு தாய் வீட்டு பிள்ளைகள் நாங்கள், பாஜக அதிமுக கூட்டணி தொடர வேண்டும்; தமிழகத்தை ஆள வேண்டும் என தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் சோழவந்தான் மாணிக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…