Minister ponmudi [Image source : EPS]
அனைத்து வகுப்புகளுக்கும் இலவச மிதிவண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய பின் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இனி தமிழகத்தில் வருங்காலங்களில் இலவச மிதிவண்டி 11 மற்றும் 12 மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகுப்புகளுக்கும் இலவச மிதிவண்டி வழங்க, நிதிநிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டிலும், 11, 12ம் இலவச சைக்கிளை பெற்று வருகின்றனர். ஆனால் கடந்த வருடம் கல்வியாண்டுக்கான இலவச சைக்கிள்கள் வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தனர். அந்த சமயத்தில், வரும் 2023 – 2024ம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, முதல்வரின் உத்தரவுக்கு பிறகு, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு, இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் இலவச மிதிவண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் (ECI) குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக அறிவித்துள்ளது. முன்னாள் துணைத்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு தினஙக்ளுக்கு முன், லேசான…
சென்னை : ஹாஸ்பிடலில் இருந்தவாறே முதல்வர் பணி சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவால் முதலமைச்சர் ஸ்டாலின் 3-வது நாளாக சிகிச்சை பெற்று…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்,…