ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் ரயில் சென்னை வந்தடைந்தது !

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப் படுகிறது. சென்னையில் ஏற்பட்டு உள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டு காரணமாக ஜோலார் பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ .65 கோடி நிதி ஒதுக்கியது.
இதற்கான பணிகளை கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து 70 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு வேகன்களில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பட்டு 50 வேகன்கள் மூலம் ரயில் இன்று காலை 7 மணிக்கு குடிநீரை ஏற்றி கொண்டு புறப்பட்டது.
குடிநீர் ஏற்றி வந்த ரயில் சென்னை வில்லிவாகத்திற்கு சற்று நேரத்திற்கு முன் வந்து சேர்ந்தது. இதையடுத்து வில்லிவாகத்தில் இருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்று குடிநீர் நிலையத்துக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படும் என தெரிவித்து உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025