#BREAKING: முழு ஊரடங்கு – கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முழு ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூட்டத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. ஏற்கனவே காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
மற்ற கடைகளுக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்கள் இடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயம் இ-பதிவு முறை 17ஆம் தேதி காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025