வருகின்ற 2021 ஆம் ஆண்டு 1 ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சியிலுள்ள மக்கள் குப்பை கொட்டுவதற்கு ரூபாய் 100 கட்டணமாக வஸோலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கலாம் என திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குப்பைகளை கொட்டுவதற்கு வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் வசூலிக்கலாம் எனவும், வணிக இடங்களுக்கு 1000 முதல் 7500 வரை கட்டணமாக வசூலிக்கவும், உணவு விடுதிகளில் 300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையிலும், திரையரங்குகளில் 750 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கலாம் என அறிவித்துள்ளது.
மேலும் பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரையிலும் மருத்துவமனைகள் 2000 ரூபாய் முதல் நான்காயிரம் ரூபாய் வரையிலும் கட்டணம் செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் விதிகளை மீறி குப்பைகளை கொட்டு பவர்களு க்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் வரையிலும், கட்டட கழிவுகளை 5,000 ரூபாய் வரையிலும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. தரம் பிரித்து குப்பைகளை கொடுக்கத் தவறும் பட்சத்தில் 5000 ரூபாய் வரையிலும் குப்பைகளை எரிப்பவர்களுக்கு 2,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…