#Breaking:கூல்ட்ரிங்க்ஸ் குடித்த 13 வயது சிறுமி மரணம் -அதிர்ச்சியில் பெற்றோர் …!

Published by
Edison

சென்னையில் மளிகைக்கடையில் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி குடித்த சிறிது நேரத்தில் சிறுமி தரணி உயிரிழப்பு.

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் சதீஸ்,காயத்ரி தம்பதியின் இளைய மகளான 13 வயது தரணி என்பவர்,நேற்று மாலை அருகில் உள்ள ஒரு கடையில் பத்து ரூபாய் கூல்டிரிங்ஸ் பாட்டில் மற்றும் ரஸ்னா பாக்கெட் வாங்கி குடித்துள்ளார். குடித்த உடனே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,அவருக்கு வாந்தியும் ஏற்பட்டது.

இதனையடுத்து,அவரது சகோதரி அஸ்வினி தனது அம்மாவை அழைத்து வர சென்றிருக்கிறார்.பின்னர்,அவரது அம்மா வந்து பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்,இதனால்,அதிர்ச்சியடைந்த அவரது அம்மா,அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.மேலும்,அவரது உடல் நீல நிறத்தில் மாறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து,சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் போலீசார்,சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.மேலும்,சிறுமி உட்கொண்ட கூல்டிரிங்ஸ் பாட்டில்மற்றும் ரஸ்னா பாக்கெட்டை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்த சேகரித்துள்ளனர்.

இதனையடுத்து,இது குறித்த விபரத்தை அருகில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று  உறவினர்கள் கேட்டபோது,கடைக்காரர் அலட்சியமாக பதிலளித்துள்ளதாகவும்,மேலும்,மளிகைக்கடையில்,காலாவதியான பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்வதாக குற்றம் சாட்டி ,உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடையை சோதனை செய்ய வேண்டும் என்றும் சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனையடுத்து,சிறுமி உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Edison

Recent Posts

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…

12 minutes ago

“தமிழகத்தில் எந்த கன்னட திரைப்படமும் வெளியாகாது” – கொந்தளித்த தி.வேல்முருகன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

36 minutes ago

கடிதத்துக்கு பதிலாக கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…

60 minutes ago

மொழி விவகாரம்: உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ? கமலுக்காக குரல் கொடுத்த சீமான்.!

சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து…

2 hours ago

“கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு” – கமல் தரப்பு வழக்கறிஞர்.!

கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து…

3 hours ago

இந்த வருஷம் ஆர்சிபிக்கு தான் கப்! ரூ.6.4 கோடி பெட் கட்டிய ராப் பாடகர் டிரேக்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல்…

5 hours ago