சிறுமிக்கு நடைபெற்ற அறுவைசிகிச்சை – பாசத்தால் திரண்ட நந்தம்பாக்கம் காவல்நிலையம்!

Published by
Rebekal

காவலரின் அன்பால் சிறுமிக்கு நடந்த இதய அறுவை சிகிச்சைக்கு திரண்ட நந்தம்பாக்கம் காவல்நிலையம்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் எலக்ட்ரானிக்ஸ் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஐந்து வயது கொண்ட மகள்தான் கவிஷ்கா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பதாக இவர்களின் வீடு அருகே நந்தம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில்குமார் குடி வந்துள்ளார். மேலும் அவரது குழந்தைகளுக்கு செந்தில்குமாரோடு மிக நெருங்கிய பழக்கம் ஏற்படவே நல்ல நட்புறவில் இரு குடும்பமும் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு  சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவரை அணுகும் பொழுது இதயத்தில் பிரச்சினை உள்ளதாக கூறி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு 5 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் சிறுமியின் தந்தை கார்த்திக்கால் அந்த நேரத்தில் அவ்வளவு பணத்தை திரட்ட முடியவில்லை. இந்த கஷ்டமான சம்பவம் தலைமை காவலர் செந்தில்குமாருக்கு தெரியவே அவர் தன்னால் முயன்ற 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.

மேலும் நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர் தங்கராஜ்ஜிடமும் இது பற்றி கூறியுள்ளார். பின் இறுதியாக காவல் நிலையத்தை சேர்ந்த அனைவரும் சேர்ந்து 65 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை திரட்டி சிறுமியின் தந்தை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளனர். மேலும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்தும் ஒரு லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதி பணத்தை ஜில்கேர் எனும் தனியார் அமைப்பு கொடுத்து உதவியுள்ளது. சிறுமிக்கு நல்ல முறையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. ஒரு சிறுமியின் அறுவை சிகிச்சைக்காக காவல் நிலையங்கள் மருத்துவமனை முன்பு திரண்ட சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

12 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

13 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

14 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

15 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

16 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

17 hours ago