எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில்,நான் முதல்வராவேன் என ஒரு போதும் நினைத்ததில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2021-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் பழனிசாமி. சேலம் மாவட்டம் எடப்பாடியில் பெரியசோரகையில் உள்ள சென்றாயப்பெருமாள் கோவியில் வழிபாடு செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.அப்பொழுது முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்றி வருகிறோம்.
தமிழகத்தை அதிகமாக ஆட்சி செய்த இயக்கம் அதிமுக.43 ஆண்டுகளாக திமுக வெற்றி பெறாத ஒரே தொகுதி எடப்பாடி.எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை.நான் முதல்வராவேன் என ஒரு போதும் நினைத்ததில்லை.இறைவனால் எனக்கு முதல்வர் பதவி கிடைத்தது. பல்வேறு சோதனைகளை கடந்து அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது .மக்களின் ஆதரவோடு அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று பேசியுள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…