சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்துக்கு செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் என்ற சுங்கச்சாவடியில் கட்டணம் வழங்குமாறு கேட்டதால், பேருந்து ஓட்டுநருக்கும் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதமானது முற்றி அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அரசுப் பேருந்தை சுங்கச்சாவடியின் குறுக்கே நிறுத்தி விட்டார் இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பேக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான பேருந்துகள் செல்ல முடியாமல் 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்றது.
மேலும் சம்பவம் நடந்த பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் ஆத்திரம் தாங்கமால் சுங்கச் சாவடியை அடித்து நெறுக்கி சூறையாடியனர். இந்த தகவல் அறிந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலவரம் செய்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் இதனால் அந்த பகுதி 5 மணிநேரமாக பரபரப்புடன் காணப்பட்டது.
மேலும் இந்தசுங்கச்சாவடியில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் மிகவும் தரக்குறைவாக நடந்து கொள்வதாக சக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.சுங்க சாவடி சூறையாடப்பட்ட சம்பவத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…