புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களையும் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களையும் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது.மும்மொழிக்கொள்கையைப் போன்றே புதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்கின்ற அம்சங்களையும் பழனிசாமி அரசு அனுமதிக்கக்கூடாது ன்று கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாமல் ஊரடங்கு தொடரும் நேரத்தில் அவாரமாக புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பு ஏற்புடையதல்ல என்று ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தி, குறைகளைச் சரிசெய்து, அதன்பிறகே செயல்பாட்டுக்கு கொண்டு வருவது சரியாக இருக்கும். அப்படி வரும் போது குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி கட்டாயம் என்பதை 8-ஆம் வகுப்பு தாய்மொழிக்கல்வி கட்டாயம் என்று அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் முதன்மை மொழியாக தமிழும், உலக அளவிலான பயன்பாட்டிற்கு ஆங்கிலமும் கொண்ட இருமொழிக் கொள்கையே ஏற்றதாக இருக்கும்.மூன்றாவது மொழியைப் படிப்பது என்பதையே விரும்பினால் மட்டுமே (Optional ) என்றிருக்க வேண்டும்.அப்படி மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க விரும்பினால் அது மாணவர்கள் விருப்பும் மொழியாகவே இருக்க வேண்டும்.ஆனால் ” அந்த மூன்றாவது மொழி என்பது எந்தக்காலத்திலும் இந்தி அல்லது சம்ஸ்கிருதம் ஆக இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தமாட்டோம் ” எனும் உறுதிமொழியைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் மத்தய அரசு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…