முந்துங்கள் அரசு உத்தியோகம்.! தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. 242 பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

  1. உதவிப் பொறியாளர்: உதவிப் பொறியாளர் பணிக்கு 78 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு ரூ.37,700 முதல் ரூ .1,19,500 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
    கல்வித்தகுதி: இளநிலையில் சிவில்/கெமிக்கல்/சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் முதுநிலையில் சிவில்/கெமிக்கல்/சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  2. சுற்றுச்சூழல் விஞ்ஞானி: இந்த பணிக்கு 70 காலி பணியிடங்கள் உள்ளன. ரூ.37,700 முதல் ரூ .1,19,500 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
    கல்வித்தகுதி: வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், நுண் உயிரியல், கடல்சார் உயிரியல், உயிரி வேதியியல், சுற்றுச்சூழல் வேதியியல், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் நச்சுயியல், அனாலிட்டிகல் வேதியியல், அப்ளைடு வேதியியல் ஆகிய பிரிவில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  3. இளநிலை உதவியாளர்: 38 இடங்கள் காலியாக உள்ள இப்பணிக்கு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால், விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் கணினி படிப்பில் 6 மாத பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  4. தட்டச்சர்: 56 இடங்கள் காலியாக உள்ள நிலையில், ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை மாத சம்பளம்.

கல்வித்தகுதி: இளநிலை பட்டப்படிப்பில் தேர்வு பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தேர்வில் தமிழ், ஆங்கிலத்தில் மேல்நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி படிப்பில் 6 மாத பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpcb.gov.in/என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 26-03-2020

தகுதிகள்: குறைந்தபட்சம் 18 வயது முடிவடைந்திருக்க வேண்டும் . ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகபட்சமாக வயது 35 ஆக இருக்க வேண்டும். ஏனையோர் 30 வயதாக இருக்க வேண்டும்

தேர்வு கட்டணம்: ஆதிதிராவிடர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு ரூ.250 மற்றவர்களுக்கு ரூ.500 மட்டுமே அளிக்க வேண்டும். மேலும் தேர்வு நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

7 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

7 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

8 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

9 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

9 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

10 hours ago