அரசு ஏற்றது.! தமிழ்நாட்டில் முதன் முதலில் திருநங்கை – இளைஞர் திருமணம் பதிவானது.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கோவையில் திருநங்கை மற்றும் இளைஞர் இருவரும் திருமணம் செய்துகொண்டு, வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் முதல் முறையாக இதுபோன்று நடந்துள்ளது என குறிப்பிடப்படுகிறது.

கோயம்புத்தூர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய மணிகண்டன் என்பவர். இவர் சுரேகா என்ற திருநங்கையை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவிலில் இருவரது திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் நரசிம்ம நாய்க்கன் பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இதனிடையே கடந்த ஜனவரி 21-ம் தேதி இந்து திருமண சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்யக்கோரி, வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். பின்னர் மணமகள் தொடர்பாக சட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர் குறித்தான இடம் பெறாததால் திருமணத்தை செய்ய சார் பதிவாளர் மறுத்துள்ளார்.

மேலும், மணிகண்டனின் பிறப்பு தேதி சான்றிதழ்களில் மாறி இருப்பதாகவும், இதுகுறித்து மேல் முறையீடு செய்யலாம் எனவும் சார்பதிவாளர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகததில் உள்ள மாவட்ட பதிவாளரிடம் மணிகண்டன் மற்றும் சுரேகா தம்பதியினர் மேல் முறையீடு மனு அளித்தனர். இதுகுறித்து மாநில பதிவுத்துறை தலைவர் தமிழநாடு அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெற்றுள்ளார்.

அப்பொழுது, இந்து திருமண சட்டத்தில் மூன்றாம் பாலினத்தனவரை மணமகன் அல்லது மணமகள் என்ற வகைப்பாட்டின் கீழ் சேர்த்து கொள்ள அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி திருமண பதிவு செய்யவும், மணிகண்டனின் பிறப்பு சான்றிதழ் தேதிப்படி பதிவு செய்யவும் வடவள்ளி சார்பதிவாளருக்கு கோவை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இன்று வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் மணிகண்டன், சுரேகா தம்பதியினர் திருமணத்தை பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் திருநங்கை – இளைஞர் தம்பதியினர் திருமணத்தை பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

2 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

2 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

3 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

3 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

4 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

6 hours ago