ஜி.பி.முத்து, பேபி சூர்யா, சிக்கா மற்றும் திருச்சி சாதனா மீது போலீசில் புகார்…!

Published by
லீனா

ஜி.பி.முத்து, பேபி சூர்யா, சிக்கா மற்றும் திருச்சி சாதனா மீது போலீசில் புகார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் பொழுதுபோக்கும் பூங்காவாக தான் இணைய தளம் உள்ளது .

அந்த வகையில், ட்வீட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் பல செயலிகள் மூலமாக இணையத்தில் பல கச்சாரத்தை சீரழிக்கும் வண்ணம் பல வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட வீடியோக்கள் இன்றைய இளைய தலைமுறையினரை மிகவும் கவர்ந்து வருகிறது.பலரும் தாங்கள் ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காக ஆபாச பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கீழக்கரை பகுதியை சேர்ந்த முஹைதீன் இப்ராஹிம் என்பவர் ஜி.பி.முத்து, பேபி சூர்யா, திருச்சி சாதனா போன்றோர் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வதாக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் காவல்துறைக்கும் புகார் கொடுத்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில், ‘சமீப காலமாக வலைத்தளங்களில் ஆபாச பேச்சு வீடியோ பதிவுகள் அதிக அளவில் வலம் வருகிறது தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்காதலால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி யூடியூப் பேஸ்புக் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அப்பாவி மாணவர்களை வழிகெடுத்து அவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாத்திக்கும் நோக்கில் சிலர் 1. ஜி பி முத்து, 2. திருச்சி சாதனா, 3, பேபி சூர்யா, 4, சிக்கா என்ற சிக்கந்தர் மேலும் பலர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர் .

இதனை இலட்சக்கணக்கானோர் காண்கின்றனர். இவர்களின் உடல் பாவனைகளும், பேச்சுக்களும் தமிழ்: நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும், குறிப்பாக இதை காணும் சிறுவர் சிறுமிகளின் மனதை பாதிப்படைய செய்யும் வகையில் ஆபாச பதிவுகள் உள்ளது. இளைய சமுதாயத்தை பாதிக்கும் இத்தகைய இணையதளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும், மாணவர்கள் மத்தியில் விஷத்தை பரப்பும் கொடிய உள்ளம் கொண்ட ஆபாச பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இது போன்ற பதிவுகள் மேலும் தொடராமல் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

22 minutes ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

1 hour ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

2 hours ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

2 hours ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

3 hours ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

4 hours ago