அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ்நாடு காவல்துறை.
ஆங்கில புத்தாண்டையொட்டி கட்டுப்பாடுகளை தமிழ்நாடு காவல்துறையின் அறிவித்திருந்தது. அதாவது, தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது.
31 ( நேற்று) இரவு முதல் 1-ஆம் தேதி அதிகாலை வரை பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. மேலும் வீட்டில் இருந்தே புத்தாண்டை வரவேற்போம் என்றும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
நேற்றிரவும், இன்று காலையும் ஓரிரு சாலை விபத்துகள், சச்சரவுகள் தவிர தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு அமைதியுடன் நடந்து முடிந்தது. இதனால் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி, புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…