death [file image]
மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று மதுரை மாவட்டத்தில் இரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது . அந்த போட்டியை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் பி மூர்த்தி இருவரும் தொடங்கி வைத்தனர்.
மதுரையில் இன்று காலை நடந்த போட்டியில் பங்கேற்ற, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினேஷ் மதுரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவரை சிகிச்சைக்காக மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தினேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…