[file image]
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பசுமை மயானங்களை உருவாக்க தலைமை செயலாளர் உத்தரவு.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் “பசுமை மயானங்களை” உருவாக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து சுடுகாடு மற்றும் இடுகாடுகளும் உரிய பராமரிப்புடன் சுத்தமாக பேணி பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பசுமை மயானங்களை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, ஆங்காங்கே பூச்செடிகள் வைத்து, மரக்கன்றுகள் நடவேண்டும். மேலும், பொதுமக்கள் நிழலில் நிற்பதற்கு வசதியாக கொட்டகைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் முறையான தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…