Tamilnadu CM MK Stalin [Image source : PTI ]
முதலமைச்சரின் பசுமை நல்கை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் பசுமை நல்கை திட்டத்தை தொடங்கி வைத்தார். சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில் பசுமை நல்கை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சுற்றுசூழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈர்க்க இந்த திட்டம் செயப்படுத்தப்படும்.
காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை பரப்ப, இயற்கையை பாதுகாக்க பசுமை நல்கை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும். கழிவு மேலாண்மை, சதுப்பு நில உருவாக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள பசுமை தோழர்கள் 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்று செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கிழக்கு கடற்கரை சாலையில் பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படுகிறது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படுகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…