குரூப்-4 முறைகேடு.! தலைமறைவாக இருந்த காவலர் மருத்துவமனையில் சிகிச்சை..?

Published by
murugan
  • குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்ததாக கூறி புகார் எழுந்தது.அந்த புகாரில் சிவகங்கை மாவட்டம் காவலர் சித்தாண்டி இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்பட்டது.
  • இந்நிலையில் தலைமைக் காவலர் சித்தாண்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட  99 தேர்வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார்  இடைத்தரகர்கள் , அரசு ஊழியர்கள் என இதுவரை 14 பேர் கைது செய்து உள்ளனர்.மேலும் இந்த முறைகேட்டில் இன்னும் யார் யார் உள்ளார்கள் என தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்ததாக கூறி புகார் எழுந்தது.அந்த புகாரில் சிவகங்கை மாவட்டம் காவலர் சித்தாண்டி இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணை தொடங்கிய சிபிசிஐடி போலீசார்  சித்தாண்டி ஒரு மாத விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றதாகவும் ,தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும்  அவரை தீவிரமாக தேடி வருவதாக சிபிசிஐடி அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து சிவகங்கை மாவட்டம் சென்ற சிபிசிஐடி தனிப்படை போலீசார் காரைக்குடி முத்துப்பட்டணத்தில் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை செய்த உதவியாளர் வேல்முருகன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

வேல்முருகன், காவலர் சித்தாண்டியின் தம்பி இவர் குரூப்-2 தேர்வில் மாநில அளவில் 3-வது இடம்பிடித்து காரைக்குடி இணை சார்பதிவாளர் அலுவலகத்தில்கடந்த 2018-ம் ஆண்டு  சேர்ந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தலைமைக் காவலர் சித்தாண்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published by
murugan

Recent Posts

லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!

லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!

மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

2 hours ago

அடுத்து இந்த 2 இடம் தான் டார்கெட்..உடனே வெளியேறுங்க! அலர்ட் கொடுத்த இஸ்ரேல்!

இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…

2 hours ago

அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என நினைத்தேன்! விமான விபத்து குறித்து சந்திரசேகரன்!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…

3 hours ago

ராமாபுரம் விபத்து : L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…

3 hours ago

ஈரானில் இந்திய மாணவர்கள் 5 பேர் காயம்? 110 பேர் பாதுகாப்பாக டெல்லி வருகை!

தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…

4 hours ago

15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…

4 hours ago