தமிழ்நாடு

ஆளுநரை சந்தித்து ஒரு பொய்யான அறிக்கையை கொடுத்துள்ளார் – முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

Published by
Venu

தினந்தோறும் பொய் அறிக்கை வெளியிடுவதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் ,அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி,பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.குறிப்பாக மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவை பொறுக்க முடியாமல் முதல்வர் பழனிசாமியை பக்குவமின்றி விமர்சித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுகவினருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், ஸ்டாலின் வேண்டுமென்றே செல்லும் இடமெல்லாம் அவதூறு பேச்சு.தினந்தோறும் பொய் அறிக்கை.அது தான் அவருடைய வாடிக்கையாக கொண்டுள்ளார்.அதனை முறியடிப்பதற்கு நாமும் தயாராக இருக்க வேண்டும்.ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்லி ஸ்டாலின் அதை உண்மையாக்க பார்க்கிறார்.பொய்யை தொடர்ந்து பேசி ஆட்சி மீது களங்கத்தை ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி செய்கிறார் .ஆட்சியும் ,கட்சியும் சிறப்பாக உள்ளதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.சமீபத்தில் கூட ஆளுநரை சந்தித்து ஒரு பொய்யான அறிக்கையை கொடுத்துள்ளார்.ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

15 minutes ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

53 minutes ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

2 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

3 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

3 hours ago