Minister Senthil balaji [File Image]
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என 3வது நீதிபதி அறிவிப்பு.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை ஜூலை 11, 12ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அறிவித்துள்ளார். செந்தில் பாலாஜியை கைது எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இரு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர். இதன்பின், ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடத்த 3வது நீதிபதியாக சி.வி கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை எப்போது விசாரிக்கலாம் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என முடியவும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அறிவித்து, வழக்கு வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி, வரும் 11-ஆம் தேதி செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை முன்வைக்க நீதிபதி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் 11ம் தேதி ஆஜராகி வாதாடுகிறார்.
இதுபோன்று 12-ஆம் தேதி அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடுகிறார். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? போலீஸ் சட்டவிரோத காவலா என்பது பற்றி விசாரிக்கலாம் என்றும் சிகிச்சை காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியுமா முடியாதா என்பதன் அடிப்படையில் விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…