வானிலை ஆய்வு மண்டல மைய இயக்குனர் புவியரசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். வெப்பசலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறினார்.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. ராமாபுரம் ,பேரூர் ,வளசரவாக்கம் ,விருகம்பாக்கம் பள்ளிக்கரணை ,அயனாவரம் , பெசன்ட்நகர் ,வியாசர்பாடி ,நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு நிலையால் கோடம்பாக்கம் , கே .கே நகர் , அண்ணாநகர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம் ,குரோம்பேட்டை ,தாம்பரம் , பெருங்களத்தூர் ,வண்டலூர் ,கிண்டிஆதம்பாக்கம் ,சூளைமேடு ஆகிய இடங்களில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்னும் சில மணி நேரத்திற்கு கனமழை மற்றும் லேசான மழை விட்டு விட்டு பெய்துவரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.சாலைகளில் ஓடும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…