சென்னையில் பல பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை!

Published by
பால முருகன்

சென்னை மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

சென்னை கனமழை 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான மழையும் சமீப நாட்களாக பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று ( அக்.30) சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடபழனி, சைதாப்பேட்டை, திருமங்கலம், ஆலந்தூர்,அசோக்நகர், கிண்டி, கோயம்பேடு,அரும்பாக்கம், தி.நகர் அண்ணாநகர்,ஈக்காட்டுத்தாங்கல், உள்ளிட்ட பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழைநிற்காமல் பெய்து வருவதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் சாலைகளில் நீர் தேங்கி இருக்கிறது. இதனால் சாலையில் நடந்து மற்றும் வாகனத்தை ஒட்டி செல்வோர்கள் அவதியில் இருக்கிறார்கள்.

அடுத்த 24 மணி நேர வானிலை 

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மீதமான வாய்ப்புகள் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருக்கிறது.

இன்று 16 மாவட்டங்களில் கனமழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் முன்னதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

31 minutes ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

39 minutes ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

1 hour ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

1 hour ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…

2 hours ago

லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன்? – மனம் திறந்து வியான் முல்டர் சொன்ன காரணம்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

3 hours ago