சென்னையில் பல பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை!

Published by
பால முருகன்

சென்னை மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

சென்னை கனமழை 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான மழையும் சமீப நாட்களாக பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று ( அக்.30) சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடபழனி, சைதாப்பேட்டை, திருமங்கலம், ஆலந்தூர்,அசோக்நகர், கிண்டி, கோயம்பேடு,அரும்பாக்கம், தி.நகர் அண்ணாநகர்,ஈக்காட்டுத்தாங்கல், உள்ளிட்ட பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழைநிற்காமல் பெய்து வருவதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் சாலைகளில் நீர் தேங்கி இருக்கிறது. இதனால் சாலையில் நடந்து மற்றும் வாகனத்தை ஒட்டி செல்வோர்கள் அவதியில் இருக்கிறார்கள்.

அடுத்த 24 மணி நேர வானிலை 

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மீதமான வாய்ப்புகள் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருக்கிறது.

இன்று 16 மாவட்டங்களில் கனமழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் முன்னதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

25 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

1 hour ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago