நெருங்கும் பருவமழை.., நேற்று 7 அமைச்சர்கள் மீட்டிங்.! இன்று 22 கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு.!

Published by
மணிகண்டன்

சென்னை : வானிலை ஆய்வு மண்டலம் விடுத்த கனமழை முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து 22 மாவட்ட ஆட்சியர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அண்டை மாநில கனமழை,  நிலச்சரிவு பாதிப்புகளை அடுத்து,  தமிழகத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வழக்கத்தை விட தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை, வெள்ள பாதிப்புகள் அதிகளவிலிருந்தன. மீட்புப்பணிகள், நிவாரண உதவிகள் என பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப சில மாதங்களானது.

அதேநிலை மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று ரிரிப்பன் மாளிகையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நேற்று சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு , தங்கம் தென்னரசு உள்ளிட்ட 7 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேலும், 3 திமுக எம்பிக்கள், சென்னை எம்எல்ஏக்கள், வருவாய்த்துறை ,  பேரிடர் துறை, மெட்ரோ நிர்வாகம் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆலோசித்தனர்.

தற்போது தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தகவல் தெரிவித்து இருந்தது.

வானிலை ஆய்வு மைய கனமழை எச்சரிக்கையை அடுத்து, தமிழக அரசு 22 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஓர் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழையை எதிர்கொள்ளப் பேரிடர் துறை, வருவாய்த்துறையால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெள்ளியாகியுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

10 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

1 hour ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

1 hour ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago