பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண் – இரவில் உதவிய பெண் காவல் ஆய்வாளர் !

Published by
Sulai

சென்னையில் இரவு நேர ரோந்து பனியின் போது பிரசவ வலியால் துடித்த கர்பிணி பெண்ணுக்கு உதவிய காவல்துறை ஆய்வாளரான ராஜேஸ்வரிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை அயனாவரம் அடுத்த நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தியாகு. இவரது மனைவி ஷீலா. நிறைமாத கர்ப்பிணியான இவர் தன் தாய் வீட்டில் தங்கி இருக்கிறார். நேற்று இரவு ஷீலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனங்களை தேடி கே.ஹெச் சாலையில் நின்று இருக்கிறார். அப்போது அந்த வழியில் ரோந்து வந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த சாலையில் அந்த பெண் நிற்பதை கண்டு விசாரித்துள்ளார்.  காவலரிடம் அந்த பெண்மணி விஷயத்தை கூறவும் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.

உடனடியாக, 108 க்கு தகவல் தெரிவித்து வர ஏற்பாடு செய்துள்ளார். 108 வாகனம் வர தாமதம் ஆனதால் காவல்துறை வாகனத்திலே பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஏற்றிஉள்ளனர். புறப்பட்ட போது எதிரில் வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றார். மருத்துவமனைக்கு சென்ற அந்த பெண்ணுக்கு இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

பெண்ணின் பிரசவத்திற்கு உதவி செய்த அந்த காவல் ஆய்வாளருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Published by
Sulai

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

10 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

11 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

14 hours ago