கோவை பேரூர் செட்டிபாளையத்தில் வரும் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72வது பிறந்தநாள் கொண்டாப்பட உள்ள நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதற்கான முகுர்த்தகால் நாட்டு விழாவில் நேற்று கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 22ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா 72வது பிறந்தநாளை முன்னிட்டு 72 கல்யாணம் 72 சீர்வரிசையுடன் நடைபெறுகிறது என தெரிவித்தார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தமிழகத்தை முதன்மை மாநிலமாக முதல்வர் கொண்டு வந்துள்ளதோடு 11 புதிய மருத்துவக்கல்லூரி பெற்று தந்து சரித்திர சாதனை படைத்துள்ளார் என பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கோடை வெயில் வருவதையொட்டி தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்கு,கோவை மாவட்டத்தை பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லை என்றும் 142 ஆண்டுகள் இல்லாத வறட்சி வந்தபோது கூட சமாளித்தோம் என குறிப்பிட்டார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…