குரூப் 4 முறைகேடு நடந்தது எப்படி..?அதிர வைக்கும் தகவல்கள்.!

Published by
murugan
  • டிஎன்பிஎஸ்சி  நடத்திய விசாரணையில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் முறைகேடு  நடைபெற்றது தெரியவந்துள்ளது. இந்த இரு மையங்களை தவிர வேறு எந்த மையங்களிலும் எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
  • சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.இந்த தேர்விற்கான தரவரிசை பட்டியலை கடந்த  நவம்பர் 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என தெரியவந்தது.

இது தொடர்ந்து மற்ற தேர்வர்கள் கொடுத்த புகாரின் பேரில் டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்தியது. தேர்வாணையம் நடத்திய விசாரணையில் ,சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களை அழைத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அந்த விசாரணையில், ராமேஸ்வரம் கோவிலுக்கு இறந்த உறவினர்களுக்கு திதி கொடுக்க சென்றதாகவும்,   அதனால் அங்கேயே தேர்வு எழுதிவிட்டு வந்ததாகவும் கூறினார்கள். தேர்வர்கள் ஒரே மாதிரி அளித்த பதிலால் அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 99 பேருக்கு இடைத்தரகர்களின் பெயரிலே கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு செய்ததாகவும் இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையிலான பேனாவினால் விடைகளை குறித்து விட்டு வந்ததும் .

image

இடைத்தரகர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டு இருந்த நபர்கள் துணையுடன் 52 தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் செய்து மாற்று விடைத்தாள்களை அதே விடைத்தாள் கட்டுகளை எடுத்து வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனால் தான் 39 தேர்வர்கள் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர்.

இந்த தேர்வு குறித்து தேர்வாணையம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் , சம்பந்தப்பட்ட தேர்வு கூடங்கள் ,கருவூலங்களை தல ஆய்வு செய்தும் , தேர்வு பணியில் ஈடுபட்டு இருந்த அலுவலர்கள் மற்றும் தேர்வர்களை நேரடியாக விசாரணை செய்ததன் அடிப்படையில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் முறைகேடு  நடைபெற்றது தெரியவந்தது எனவும் இந்த இரு மையங்களை தவிர வேறு எந்த மையங்களிலும் எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என தடை விதித்துள்ளது. தரவரிசை பட்டியலில்வந்துள்ள 39 பேருக்கு பதிலாக தகுதியான வேறு 39 தேர்வர்களை தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்க்கும் அனுமதிக்கப் பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

 

Published by
murugan

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

9 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

9 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

10 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

11 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

12 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

12 hours ago