கொரோனாவால் இறந்தவரின் உடலை கையாளுவது எப்படி ? தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

Published by
Venu

கொரோனாவால் இறந்தவரின் உடலை கையாளும் முறையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

 

இறந்தவரின் உடலை வாகனத்தில் எடுத்துச் செல்லும் வழிமுறைகள்:

  • இறந்தவர்களின் உடலை பிளாஸ்டிக் பையை கொண்டு முழுமையாக  சுற்றி வைக்க வேண்டும். அந்த பிளாஸ்டிக்  பையின் மேல்புறத்தில் 1% சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

 

  • இறந்தவர்களின் உடலை கையாளும் பணியாளர்கள் கட்டாயமாக சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும்  கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.

 

  • இறந்தவரின் உடலை தகனம் செய்யும் இடத்தில் ஒப்படைத்த பின் அந்த வாகனத்தை முழுமையாக 1% சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு தெளிக்க வேண்டும்.

தகனம் /அடக்கம் செய்யும் இடத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் :

  • தகனம் /அடக்கம் செய்யும் இடத்தில் இருக்கும்  பணியாளர்கள் கட்டாயமாக சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும்  கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.

 

  • இறந்தவரின் முகத்தை உறவினர்கள்  பார்க்க விரும்பினால், பணியாளர் முகத்தை மட்டும் திறந்து காட்ட வேண்டும். பணியாளர்களை தவிர வேறு யாரும் உடலை கையாள அனுமதிக்கக்கூடாது.

 

  • இறந்தவரின் உடலை தொடாமல் மேற்கொள்ளப்படும் மத சடங்குகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 

  • கொரோனாவால் இறந்தவர்களின் உடலை  குளிப்பாட்டவோ, கட்டிப்பிடிக்கவோ, முத்தமிடவோ அனுமதியில்லை.

 

  • தகனம் / அடக்கம் செய்யும் போது பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்க அனுமதி. குறிப்பாக சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

  • உடலை தகனம் செய்யத பின் சாம்பலை குடும்பத்தினருக்கு வழங்கலாம். அதில் எந்தவித ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
Venu

Recent Posts

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

6 hours ago

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

7 hours ago

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

7 hours ago

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

7 hours ago

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

8 hours ago

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

15 hours ago