மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், ஓவியர் சங்கம் சார்பில் சீர்காழி பேருந்து நிலையம் அருகே பிரம்மாண்டமான கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், ஓவியர் சங்கம் சார்பில் சீர்காழி பேருந்து நிலையம் அருகே பிரம்மாண்டமான கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட இந்த ஓவியத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஓவியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு செயலாளர் ஞானவேல் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு பிரமான ஓவியத்தை வரைந்தனர். மேலும், நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி, காவல் துணை கண்காணிப்பாளர் யுவப்பிரியா மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஓவிய சங்கத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…