உணவு வர தாமதமானதால் காதல் மனைவியை கணவன் திட்டியதால் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள விஜயநகரில் ப்ளம்பராக பணிபுரியக்கூடியவர் தான் மணிகண்டன். இவர் அபிராமி என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், நேற்று அபிராமி உணவு சமைக்க தாமதமானதால் மணிகண்டன் திட்டியுள்ளார். இதனால் அபிராமி மனமுடைந்துள்ளார்.
இந்நிலையில், அடுப்பாங்கரைக்கு சென்ற அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். இதனால் உடல் முழுவதும் தீ பற்றியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மணிகண்டன் தீயை அணைக்க முயற்சித்துள்ளார். ஆனால், அவரது உடலிலும் தீ பிடித்ததால் அவரால் அணைக்க முடியவில்லை. எனவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அபிராமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில் இவ்வாறு அபிராமி செய்துகொண்டுள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…