Annamalai interview about DIG suicide [Image Source : File pic/ANI]
டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை.
கோவையில் சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிஐஜி இப்போது நம்மிடம் இல்லை என்பது துக்கமளிக்கிறது. நானும் முன்னாள் காவல் அதிகாரி என்பதால் கூடுதல் கவலை அளிக்கிறது. நல்ல நேர்மையான, அதிகாரியாக பணி செய்தவர்.
காவல்துறையில் அடிமட்டத்தில் உட்சபடச்ச மன அழுத்தம் உள்ளது. உயர் அதிகாரிகளுக்கு வேறு விதமான மன அழுத்தம் உள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக இப்படி தற்கொலையை பார்க்கிறோம். டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புக்குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அதன்படி, டிஐஜி விஜயகுமார் தற்கொலையை அனைத்து கோணங்களிலும் ஆராய வேண்டும். தற்கொலைக்கு முன்பு எந்த காவல்துறை உயர் அதிகாரியிடம் பேசினார் என்பதை விசாரிக்க வேண்டும். டிஐஜி விஜயகுமார் குடும்பத்தில் ஒருவருக்கு குரூப் ஏ பிரிவில் பணி வழங்க வேண்டும் என கூறினார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…