‘நான் போகிறேன்! வரமாட்டேன்’ – இறப்பு என்னை தழுவும் வரை அரசியலில் ஈடுபடமாட்டேன்!- தமிழருவி மணியன்

Published by
லீனா

காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடைபெறுகிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் புதிதாக கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு, ‘கட்சி தொடங்க போவதில்லை’ என நேற்று அறிவித்து இருந்தார். இதனையடுத்து அந்த கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியைக்கப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,  மக்களை நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று  அரசியல், இந்த மண்ணில் மலரவேண்டும், மீண்டும் காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க முயற்சித்தது தான் நான் செய்த குற்றம். மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களும் பேதம் தெரியாத அரசியல் உலகில், இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை.

என் நேர்மையும், தூய்மையும், வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்பட அரசியல் களத்தில் இருந்து முற்றாக விலகி  நிற்பதே விவேகமானது. எந்த கைமாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோர்த்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடைபெறுகிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன். திமுகவில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். ‘நான் போகிறேன் வரமாட்டேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago