வைத்திலிங்கத்தை ஒன்றிய செயலாளர் பதவிக்கு ரெக்கமெண்ட் பண்ணதே நான் தான் – ஜெயக்குமார்

Published by
லீனா

அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் இடைவிடாமல் மின் வினியோகம் செய்யப்பட்டது என ஜெயக்குமார் பேட்டி. 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் இடைவிடாமல் மின் வினியோகம் செய்யப்பட்டது.

ரூம் போட்டு ஊழல் எப்படி செய்யலாம் என்று யோசிக்கும் அமைச்சர் எப்படி மின்வளத்தை ஒழுங்காக பார்த்துக் கொள்வார். அடிக்கடி மின்வெட்டு பிரச்சினை குறித்து எப்படி பேசுவார்? மின்சாரம் என்பது 24 மணி நேரமும் மக்களுக்கு கிடைக்க வேண்டும். கை சுத்தமான ஆட்கள் துறையில் இருந்தால் இந்த கட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் டிடிவி தினகரன் போன்று பல தேர்தலை சந்தித்து தோல்வியடைந்த பின்பு ஆர் கே நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து ஜெயித்து வந்தவர் போல் நாங்கள் வரவில்லை. பணத்தை வைத்து நாங்கள் கட்சி நடத்தவில்லை. நாங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் வழியில் தான் கட்சி நடத்தி வருகிறோம்.

 1998 இல் ஒரத்தநாட்டில் முதன் முதலில் வைத்தியலிங்கத்தை அறிமுகம் செய்தவன் நான், அப்படிபட்டவர் எடப்பாடி குறித்தும் என்னைப் பற்றியும் தேவையில்லாமல் பேசக்கூடாது. வைத்திலிங்கத்தை ஒன்றிய செயலாளர் பதவிக்கு ரெக்கமெண்ட் பண்ணதே நான் தான்; இல்லனா அவர யாருக்கு தெரியும்? என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

4 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

5 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

5 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

5 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

6 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

6 hours ago