திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் என்ற சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். சுமார் 68 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது.
சுர்ஜித் இருக்கும் ஆழ்துளை கிணறுக்கு அருகில் 90 அடிக்கு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இரண்டு ரிக் இயந்திரங்கள் மூலம் 45 அடி ஆழத்திற்கு மட்டுமே குழி தோண்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது போர்வெல் இயந்திரத்தின் மூலமாக குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
சுர்ஜித் பெற்றோருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் ரஜினி , ஹர்பஜன்சிங் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் குழந்தை சுர்ஜித் மீட்டு வர வேண்டுமென எனக் கூறியுள்ளனர். தமிழகத்தின் பல கோவில்கள் , மசூதிகள் , சர்ச்சுகளில் பொதுமக்கள் பிரார்த்தனைகள் செய்து வருகின்றன.
நடுக்காட்டுபட்டி சுற்றியுள்ள கிராம மக்கள் நேற்று யாரும் தீபாவளியை கொண்டாட வில்லை. இந்நிலையில் நடிகர் சத்யராஜ் ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டு உள்ளார். அதில் ” சுர்ஜித் நிச்சயம் மீட்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.இது மிகவும் வேதனையான நிகழ்வு. சுர்ஜித் மீட்கப்பட வேண்டும். அந்த நல்ல செய்திக்காக அனைவருடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன் ” என கூறினார்
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…