மத்திய அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தது. எனினும், போராட்டங்கள் மற்றும் பேரணிகள் பல இடங்களில் நடைபெறுவாரே இருந்தது. இந்த நிலையில், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதனை அடுத்து, ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படும் என அந்த மாநிலத்தின் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி நேற்று ராமேசுவரம் வந்தார். ராமநாத சாமியை தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நேற்று தை அமாவாசை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாத சாமியை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து, அனைத்து மக்களும் உடல் நலத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டதாக கூறினார். மேலும், குடியுரிமை சட்ட திருத்தத்தை யாரும் எதிர்க்க வேண்டாம். அது நாட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடிய சட்டம் அதை புரிந்துகொள்ளாமல் சிலர் எதிர்ப்பதாக விமர்சித்தார். குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கும்படி சாமியிடம் வேண்டிக் கொண்டேன் என தெரிவித்தார்.
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…