Annamalai jeyalalitha [Image- IE & ABP]
ஜெயலலிதா பெயரை நான் குறிப்பிடவேயில்லை, அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக முக்கிய பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். அண்ணாமலைக்கு எதிராக நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இதற்கு அண்ணாமலை பதில் அளித்து கூறும்போது, எனது பேட்டி தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. நான் எங்கும் ஜெயலலிதா என்ற பெயரை குறிப்பிடவில்லை. ஒரு பெண்ணாக இருந்து தமிழக அரசியலில் அவர் வளர்ந்த விதம் குறித்து நான் பலமுறை பேசியுள்ளேன்.
எனது பேச்சு தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது, தமிழக அரசு ஊழலில் சிக்கியுள்ளது. ஊழலுக்கு எதிராக ஊழல் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறுவதற்கு எனது போராட்டம் தொடரும், அதற்கு தான் அரசியலுக்கு வந்துள்ளேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…