[Image Source : Twitter/@maiamofficial]
குடியரசு தலைவரை அழைக்காததால் தேசத்தின் பெருமிதம் அரசியல் ரீதியாக பிளவுப்பட்டுள்ளது என கமல்ஹாசன் அறிக்கை.
டெல்லியில் சென்ட்ரல் விஸ்டாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், பிரதமர் மோடியே திறந்து வைப்பதை கண்டித்து 19 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில், தேசிய நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்க வேண்டும். திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை நாட்டிற்கு சொல்ல வேண்டும்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காததால் தேசத்தின் பெருமிதம் அரசியல் ரீதியாக பிளவுப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் நாடாளுமன்றத்தின் செயல்பாட்டுக்கு இன்றியமையாதவர். நாடாளுமன்ற புதிய வீட்டின் அதன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வசிக்க வேண்டும்.
எனவே, தேசிய நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். ஜனநாயகத்தை நான் நம்புகிறேன், திறப்பு விழாவை புறக்கணித்துள்ள எதிர்க்கட்சிகள் பரிசீலினை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…