“கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் அறிவிப்பதுதான் இறுதி முடிவு” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்களுடன் நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக விரைவில் தொடங்க வேண்டும்.தேமுதிக செயற்குழு ,பொதுக்குழு கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும். கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் அறிவிப்பதுதான் இறுதி முடிவு.
அதிமுக கூட்டணியில்தான் பல ஆண்டுகளாக தேமுதிக இடம்பெற்றிருக்கிறது.என்னுடைய ஆதரவை ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு தருகிறேன்.சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று பார்க்க கூடாது.சசிகலா வந்த பிறகு மாற்றம் நிகழுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.எல்லா சாதியும் இட ஒதுக்கீடு கேட்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராகி வருகிறது.இந்தமுறை தலைவர் விரும்பினால் என் குரல் நிச்சயம் சட்டசபையில் ஒலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் பி.வில்சன் ஆகியோர் இன்று…
சென்னை : தமிழகத்தில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை…
டெல்லி : நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 25, 2025) மாநிலங்களவை உறுப்பினராக…
சென்னை : வடக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த…
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவன், உடல் எடையை குறைப்பதற்காக யூடியூப்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸின் 86வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்,…