சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

Published by
Venu

“கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் அறிவிப்பதுதான் இறுதி முடிவு”  என்று  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின்  பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்களுடன் நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக விரைவில் தொடங்க வேண்டும்.தேமுதிக செயற்குழு ,பொதுக்குழு கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும். கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் அறிவிப்பதுதான் இறுதி முடிவு.

அதிமுக கூட்டணியில்தான் பல ஆண்டுகளாக தேமுதிக இடம்பெற்றிருக்கிறது.என்னுடைய ஆதரவை ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு தருகிறேன்.சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று பார்க்க கூடாது.சசிகலா வந்த பிறகு மாற்றம் நிகழுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.எல்லா சாதியும் இட ஒதுக்கீடு கேட்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராகி வருகிறது.இந்தமுறை தலைவர் விரும்பினால் என் குரல் நிச்சயம் சட்டசபையில் ஒலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

22 minutes ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

3 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

3 hours ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

4 hours ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

5 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

6 hours ago