எனக்கு பங்கு இல்லை..! 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் – அண்ணாமலைக்கு கனிமொழி நோட்டீஸ்!

Published by
பாலா கலியமூர்த்தி

கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகாருக்கு கனிமொழி எம்பி விளக்கம்.

திமுகவினரின் சொத்துப்பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட விவகாரத்தில் கலைஞர் டிவியில் ரூ.800 கோடிக்கு சொத்து இருப்பதாக அண்ணாமலை வெளியிட்ட தகவலுக்கு கனிமொழி மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், கலைஞர் டிவியில் தனக்கு பங்கு இல்லை என கனிமொழி மறுப்பு தெரிவித்து, அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவதூறு தொடர்பாக அண்ணாமலை மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது. அவதூறு தொடர்பாக 48 மணிநேரத்தில் தன்னிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவதூறு வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும். அவதூறு பரப்பியதற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக சார்பில் ஆர்எஸ் பாரதியை தொடர்ந்து, தற்போது அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கனிமொழியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுகவினரின் சொத்து பட்டியலை கடந்த 14-ம் தேதி அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதில், கலைஞர் டிவியில் கனிமொழி பங்குதாரராக உள்ளார் என தகவல் தெரிவித்திருந்தார். ஆதாரம் இல்லாமல் சொத்து பட்டியலை வெளியிட்டதாக திமுகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

18 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

50 minutes ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

58 minutes ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

2 hours ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

2 hours ago