Kanimozhi notice to Annamalai! [File Image]
கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகாருக்கு கனிமொழி எம்பி விளக்கம்.
திமுகவினரின் சொத்துப்பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட விவகாரத்தில் கலைஞர் டிவியில் ரூ.800 கோடிக்கு சொத்து இருப்பதாக அண்ணாமலை வெளியிட்ட தகவலுக்கு கனிமொழி மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், கலைஞர் டிவியில் தனக்கு பங்கு இல்லை என கனிமொழி மறுப்பு தெரிவித்து, அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அவதூறு தொடர்பாக அண்ணாமலை மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது. அவதூறு தொடர்பாக 48 மணிநேரத்தில் தன்னிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவதூறு வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும். அவதூறு பரப்பியதற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக சார்பில் ஆர்எஸ் பாரதியை தொடர்ந்து, தற்போது அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கனிமொழியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுகவினரின் சொத்து பட்டியலை கடந்த 14-ம் தேதி அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதில், கலைஞர் டிவியில் கனிமொழி பங்குதாரராக உள்ளார் என தகவல் தெரிவித்திருந்தார். ஆதாரம் இல்லாமல் சொத்து பட்டியலை வெளியிட்டதாக திமுகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…